தமிழகத்தில் முதல்முறையாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சலுகைகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறலாம். மதிப்பெண் குறைந்தால் மறு மதிப்பீடு கோரியும் விண்ணப்பிக்கலாம். தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு திட்டம் அமலில் உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.