அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (AIADMK) தலைமை கழகம் சார்பில் இன்று (ஜூன் 26) மிக முக்கியமான அதிரடி அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வெளியாகியுள்ள அந்த அறிவிப்பில், அதிமுக மகளிர் அணியின் செயல்பாடுகள் மற்றும் கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மெகா ஆலோசனைக் கூட்டமானது வரும் ஜூலை 1-ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேரில் தலைமை தாங்கி, மகளிரணியினருக்கு அதிரடி ஆலோசனைகளையும், தேர்தல் பணிகளுக்கான மாஸ் உத்திகளையும் வழங்க உள்ளார்.
தலைமைக் கழக அறிவிப்பு pic.twitter.com/0X1084Xqce
— AIADMK (@AIADMKOfficial) June 26, 2026
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள், மாவட்ட கழக இணை மற்றும் துணை செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் கழக செய்தித் தொடர்பாளர்கள் என அனைத்து மட்ட பெண் நிர்வாகிகளும் எவ்வித தொய்வும் இன்றி கட்டாயம் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
