தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எதிரொளியாக கடந்த வாரம் முழுவதும் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது