குடிசையில் வாழ்ந்தவர்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றவர் முதல்வர் ஸ்டாலின் என அமைச்சர் சக்கரபாணி பெருமிதம் தெரிவித்துள்ளார். பழனி அருகே கீரனூர் பேரூராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சமயத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.

நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி குடிசையில் வசிப்பவர்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றவர் முதலமைச்சர். இத்திட்டத்தின் மூலம் கீரனூர் பேரூராட்சியில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.