தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6-ம் தேதி முதல் விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பிறகு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் தேர்வுகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று முதல் மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக இருப்பதால் அதன் பிறகே மீண்டும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.