பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் மேற்குவங்க மாநிலம் நியூ ஜல் பைகுரி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ரயில் ஏப்ரல் 24 இன்று முதல் ஹிஜ்லி, கரக்பூர், பட்டா நகர் வழித்தடத்தில் செல்லும். அதனை போலவே மேற்கு வங்கத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் (22605) வருகின்ற ஏப்ரல் 26ஆம் தேதி முதல் 12 மணிக்கு புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.