காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி இன்று 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். பழமையும் வரலாற்று சிறப்பும் உடைய காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்ச பேசுவரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் போக்குவரத்து பல இடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.