கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி பெரியண்ணன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காட்டுப் பூனை விழுந்துள்ளது. இதனிடையே கிணற்றில் விழுந்தது சிறுத்தை என வதந்தி பரவியது.

இதனைத் தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இளைஞர்கள் என பலர் அதனைக் காண குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து வலைவீசி காட்டுப் பூனையை பிடித்தனர்.