ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தடம் எண் 82 சி கொண்ட அரசு பேருந்து சுமார் 25 பயணிகளுடன் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது ஸ்ரீபெரும்புதூர் பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென பேருந்தில் பழுது ஏற்பட்டதால் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை கீழே இறக்கி விட்டனர். இதனால் மாற்று பேருந்துக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.