திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலாக பிப்ரவரி 3-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும். உள்ளூர் விடுமுறை அன்று அரசு அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.