தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அல்லிக்குளம் பகுதியில் குணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இன்று அமராவதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் கோரம்பள்ளம் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது திடீரென வந்த குணாவும் அவரது நண்பர்களும் அமராவதியை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் குணா தனது மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் படையமடைந்த அமராவதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.