தனது திரைப்படங்களுக்குக் கிடைக்கும் தேசிய விருதுகள் மற்றும் அதுதொடர்பாக எழுந்துள்ள விவாதங்கள் குறித்து நடிகர் தனுஷ் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சில தரமான படங்களுடன் ஒப்பிடும்போது தனது படம் குறித்த விவகாரத்தில் நிலவும் விமர்சனங்களுக்கும், முந்தைய காலங்களில் தனது மாஸ்டர்பீஸ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கும் அவர் மிகத் துணிச்சலாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் வெளிவந்த ‘மெய்யழகன்’ மற்றும் ‘மகாராஜா’ போன்ற திரைப்படங்கள் ‘ராயன்’ படத்தை விடவும் சிறந்த படைப்புகளாக இருந்தன என்பதைத் தான் ஏற்றுக்கொள்வதாகத் தனுஷ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், கடந்த காலங்களில் வெளியான தனது பல முக்கியப் படங்களுக்குத் தேசிய விருதுகள் தகுதியானதாக இருந்தபோதிலும், அப்போது யாரும் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘புதுப்பேட்டை’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’, ‘மரியான்’ மற்றும் இந்தியில் வெளியான ‘ராஞ்சனா’ போன்ற மிகச் சிறந்த கலைப்படைப்புகள் வெளியான காலகட்டங்களில், அவற்றுக்குத் தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்று வெறும் 10 சதவீத மக்கள் கூட வலுவாகக் குரல் கொடுக்கவில்லை என்பதைத் தனுஷ் வேதனையுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

தற்போது தனக்குக் கிடைக்கும் தேசிய விருதுக்கு எதிராக சுமார் 90 சதவீத மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “தட்டிக் கொடுங்கள்… ஆனால் தட்டி விடாதீர்கள்” என்ற வைரல் வரிகள் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“>

 

சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் தனுஷின் இந்தப் பேட்டி தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.