சேலம் மாவட்டம் உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே 35 வயது மதிக்கத்தக்க நம்பர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அந்த நபரின் பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையை வைத்து சோதனை செய்ததில் அவர் கொல்லப்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி என்பது தெரியவந்தது. கடந்த செப்டம்பர் மாதம் கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரி காதல் திருமணம் செய்துள்ளார்.

தனது மகள் காதல் திருமணம் செய்ய அண்ணனின் மனைவி சாந்தி தான் காரணம் என நினைத்து கருணாநிதி சாந்தியை கொடூரமாக கொலை செய்தார். அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு மர்ம நபர்கள் கருணாநிதியை குத்தி கொலை செய்துள்ளனர். அவரை குத்தி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்