நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த விஜயகுமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கலா தனது கணவரின் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்தார். இதனால் படுகாயமடைந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.