நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீ.மேட்டூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் அதே பகுதியைச் சேர்ந்த பல இளம் பெண்களை செல்போனில் போட்டோ எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஜீவா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன் இளம்பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது உறுதியானது. இதனால் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.