டிவி ரிமோட் தொடர்பாக அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்பட்ட சண்டை கொலைக்கு வழிவகுத்துள்ளது. கர்நாடக மாநிலம் மோல்கல்மூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. என்எம்எஸ் காலனியில் வசிக்கும் லட்சுமண பாபுவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்திரசேகர் (14), அவரது தம்பியிடம் டிவி ரிமோட் தொடர்பாக சண்டையிட்டுள்ளார். இவர்களது தகராறில் சோர்வடைந்த தந்தை லட்சுமணபாபு, மகன் சந்திரசேகரின் தலையில் கத்திரிக்கோலால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுவனின் தலையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்தனர்.