தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்கள் .அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பெற்றோரின் வருமானம், மணமகளின் வயது உள்ளிட்ட  தகவல்களின் அடிப்படையில் திருமணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் இருக்கிறது.

இந்த நிலையில் புதிய தேர்தல் வாக்குறுதியின்படி, மணமகளுக்கு 10 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட இருப்பதாகவும், மாணவர்களுக்கு இலவச இணைய வசதி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.