மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி நாளை மதுபான கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் நாளை மது கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளார்.