விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் தேவராஜ் காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கார்த்திக் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று மாலை கார்த்திக் மோட்டார் சைக்கிளில் காருசேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஏ.மீனாட்சிபுரம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.