திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாரபாளையம் பகுதியில் விஜி என்பவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாக விஜி ஒரு வாலிபரை காதலித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த விஜயின் தாய் தனது மகளை கண்டித்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த விஜி பாரப்பாளையம் பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.