சென்னை கடற்கரை மற்றும்  எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால்  சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை 7 மாதங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து கடற்கரை – சேப்பாக்கம் இடையே பறக்கும் ரயில் சேவை வருகின்ற  ஜூலை 1 ஆம் தேதி முதல் 2024 ஜனவரி 31 ஆம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது. இதனால் சென்னை ரயில் சேவை உபயோகிக்கும் பெரும்பாலான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.