தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் என்னையே நான் மறந்து விட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தமிழகத்திற்கும் ஜப்பானிற்குமான தொடர்பு மிக மிக அதிகம்.

தமிழைக் காப்பது தமிழினத்தையே காப்பதாகும். ஜப்பான் தமிழர்களின் அன்பான வரவேற்பை நான் மறக்க மாட்டேன். தமிழகத்திற்கு வாருங்கள் உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது என்று டோக்யோவில் தமிழர்களிடையே முதல்வர் ஸ்டாலின் பேசினார்.