நாடு முழுவதும் ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய பள்ளி அனுபவத்திற்காக மூன்று வயது முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக அங்கன்வாடி திட்டமான செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் பலன்களில் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள அங்கன்வாடியில் ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் ஒருநாள் தொகையானது இரண்டு ரூபாயில் இருந்து ஐந்தாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல சரக்குகளை விநியோகிப்பதற்கு ஒரு கிலோவிற்கு அனுமதிக்கப்பட்ட போக்குவரத்து செலவு 15 வருடங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட 50 பைசாவிலிருந்து தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 115 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இந்த அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு காலையில் லேசான சிற்றுண்டி, மதியம் கஞ்சி பருப்பு அல்லது சாதம் மாலையில் உப்புமா, பயறு  வகைகள் வாரத்தில் இரண்டு முறை பால் மற்றும் முட்டை போன்றவற்றை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய ஏற்பாடுகள் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.