கோவையில் நிருபர்களுக்கு அளித்த அண்ணாமலை கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்த போது, முதல்வர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியில் காளை சேர்க்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை மாற்றி காளையை அதிலிருந்து நீக்கியது பாஜக என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய பாஜகஅரசு ஆதரவால் தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை மீதான தடை நீங்கியது. தடைக்கு காரணமாக இருந்த கருணாநிதி பெயரை மைதானத்திற்கு வைக்கக்கூடாது என அவர் கூறியுள்ளார்.