ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்..

மதுரையில் ஜனவரி 15, 16, 17 இல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 10 மற்றும் 11ஆம் தேதி முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 11ஆம் தேதி மதியம் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம். madurai.nic.in   இன் மூலம் காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் தனித்தனியே முன்பதிவு செய்யலாம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு முன்பதிவு செய்யலாம்.

அதேபோல ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளின் கொம்புகளில் ரப்பர் குப்பி பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான அனைத்துதுறை அதிகாரிகள் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். காளைகளை விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் நேரில் ஆய்வு மேற்கொள்வர் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்..