நாகை அருகே வீடு இடிந்து விழுந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் இன்று நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவன் அஜீஸ் வீட்டில் இருந்த நிலையில் மழையால் அவரது வீடு திடீரென இடிந்து விழுந்தது. இதில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே திருவாரூரில் இன்று காலை கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நான்காம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.