சென்னையில் இன்று முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும், விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் மற்றும் டூவீலர் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி சேவைகள் மக்களுக்கு கிடைக்காது என்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.