செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் பத்திரிக்கையாளரை அருமையாக கையாளுறேன்.  நான் பத்திரிக்கையாளர் கிட்ட அப்படி என்ன தப்பு பண்ணிருக்கேன் ?  …நான் ஏதும் தவறா பண்ணலயே, என்ன பண்ணி இருக்கேன் ? நான் வெளிப்படையா ஒப்பனா இருக்கேன்.  எந்த பத்திரிக்கை நண்பர்களிடமும் யும் சைடு டீலிங்க் வைக்கிறது கிடையாது.

இத்தனை பேர் இங்க இருக்குறீங்க. யார் கிட்டயாச்சும் சைடு  டீலிங்க் வைக்கிறேன்,  சைடா நான் பேசுறேன், கிடையவே கிடையாது. என் கருத்தை உங்க முன்னாடி வைக்கிறேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு,  அண்ணாமலையாக என்னுடைய வேலையை செய்கின்றேன். பத்திரிகையாளராக உங்க வேலையை நீங்க செய்யிறீங்க, அவ்ளோதான்.

பத்திரிகையாளர்களை பொருத்தவரைக்கும் உங்க வேலைய நீங்க செய்யிறீங்க. என் வேலையை நான் செய்யுறேன். பர்சனனாலாக வீட்டுக்கு வன்மத்தை எடுத்துட்டு போல, பர்சனனாலாக  நீங்களும் வீட்டுக்கு வன்மத்தை எடுத்துட்டு போல… கண்டிப்பா நீங்களும் ஒத்துக்குவீ ங்க, நானும் ஒத்துக்குறேன். பர்சனனாலாக உங்களுக்கு தெரியும். ஒரு பிரஸ் மீட் முடிஞ்சபிறகு,  உங்களை சந்திச்சி… அன்பா பேசிட்டு… கைகுலுக்கி விட்டு போற ஆளு நானு.

அதே நேரத்துல இன்னைக்கு பிரஸ் மீட் இல்ல,  ஐயோ 4 மணி நேரமா நிக்கிறாங்க… மரியாதை கொடுத்து பேசணும் என எல்லா இடத்துலையுமே சொல்லுறேன்…  உதாரணத்துக்கு சென்னை ஏர்போர்ட்ல பேசிருப்பேன். தூத்துக்குடில  இறங்கி இருப்பேன். அண்ணா என்ன அண்ணா ? சென்னைல பேசிட்டிங்க…  நாங்களும் இருக்கோம். இப்படி நீங்க பேசாம போனா  ஆபீஸ்ல என்ன நினைப்பாங்க? உங்களுக்காக பேசிவிட்டு போற அரசியல்வாதி நான். உதாசீனபடுத்தகூடாது அப்படினு எல்லா இடத்துலையும் பேசுற ஆளு. கண்டிப்பா நண்பர் நீங்க தரம் பிரிச்சி பாப்பிங்க என தெரிவித்தார்.