இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்து அறிவித்துள்ளது. மிகவும் அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே அங்கீகரிக்கப்படாத செயலிகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இவற்றை கண்காணித்து நாடு முழுவதும் இந்த தடை அமலுக்கு வந்துள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.