எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வருடாந்திர திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யும் தொகையை வட்டியோடு சேர்த்து மாத தவணைகளில் குறிப்பிட்ட தொகையை முதலீட்டாளர்களுக்கு வங்கி வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மாதாந்திர தொகையை இ.எம்.ஐக்களில் வட்டியுடன் பெறலாம். இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டம் குறித்து தெரிந்துகொள்ள அருகில் உள்ள எஸ்பிஐ கிளையை அணுகவும்.