கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் திடீர் குப்பத்தில் சந்துரு(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சந்துரு 17 வயதுடைய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அவரை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு மாணவியின் பெற்றோரை சந்துரு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து மாணவியின் பெற்றோர் சந்துருவை கண்டித்தனர்.

இதனால் கோபமடைந்த சந்துரு அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சந்துரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.