கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 12 வயது சிறுமியை சித்தப்பா உறவு முறை கொண்ட 31 வயதுடைய வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் சித்தப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.