கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரில் ஸ்ரீ முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து பிரியா லட்சுமி தனது விவரங்களை பதிவிட்டார். பின்னர் பிரியா லட்சுமியை தொடர்பு கொண்டு பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனை நம்பி பிரியாலட்சுமி பல்வேறு தவணைகளாக 7 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். ஆனால் அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்ப வரவில்லை. இதுகுறித்து பிரியா லட்சுமி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.