இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சியின் கூட்டணிக்கு ஏன் வைக்கிறார்கள்? தேர்தல் ஆணையம் அதை ஏற்கக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையானதை செய்ய வேண்டுமே தவிர சனாதன அரசியல் மக்களுக்கு தேவை இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தை சுட்டிக்காட்டி திமுகவை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் லஞ்சம், ஊழல் மற்றும் டாஸ்மாக்கை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பின்னர் அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.