தமிழகத்தில் இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னையில் நகர் பகுதி முழுவதும் இரவில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.