கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை வாய்ப்பதற்கு மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை மத்திய அமைச்சரிடம் கோவை நகரம் அனைத்திலும் வளர்ச்சி பெற்று உள்ளதால் அங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் ஜெய்கா நிதி உதவி இல்லாமல் மத்திய அரசின் நிதியின் மூலம் அந்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் கோவையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை வருவது உறுதியாகியுள்ளது.