தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு 890 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து தென் தமிழகத்திற்கு நாளை 280 பேருந்துகளும், நாளை மறுநாள் 355 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும் கோயம்பேட்டில் இருந்து ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நாகை, வேளாங்கண்ணி மற்றும் ஓசூருக்கு 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர் மற்றும் ஈரோட்டுக்கு 200 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.