கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக திருச்சி புத்தூர் நால்ரோடு சிக்னலில் காவல்துறையினர் நிழற்கூரை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் போது வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனர்.

100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும் மாவட்டங்களில் திருச்சியும் ஒன்று. இங்கு மத்திய நேரங்களில் வெயில் அதிகமாக வாட்டி வதைத்து வருவதால், சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக காவல்துறையினர் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.