முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 35வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் விரைவில் விடுதலையாகி கரூர் மாவட்டத்தில் மக்கள் பணியாற்றிட வேண்டும் என கூறி வேளாங்கண்ணி மாதா கோவிலில் திமுக கவுன்சிலர் மற்றும் நிர்வாகி தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். “செந்தில் பாலாஜி விடுதலையாக வேண்டும் என்பது எங்களின் கருத்து மட்டுமல்ல, மொத்த திமுக தொண்டர்களின் கருத்து” என்றனர்.