தடுமாறி, தடுமாறி பொய் மூட்டைகளோடு பவனி வருகிறார் பிரதமர் மோடி என திராவிட கழக தலைவர் கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘இந்தப் புளுகு கந்தப் புராணத்திலும் இல்லை” என்பது பழைய பழமொழி. இப்போதுள்ள நாட்டு நிலவரப்படி, இந்தப் புளுகினை தேர்தல் பிரச்சாரத்தில் மோடியால் மட்டுமே சொல்ல முடியும் என்று மக்கள் கூறும் அளவுக்கு, பிரதமர் மோடி சொல்லும் இமாலயப் பொய்கள், கோணிப் புளுகன் கோயபெல்ஸ் காலத்தில்கூட கண்டுபிடிக்க முடியாதவைகளாகும் என்று விமர்சித்துள்ளார்.