மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்களை தனியார் பள்ளிகள் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளி வேன்களை ஆய்வு செய்து அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒரு மாதத்திற்கு மேல் இருப்பதால் வாகனங்களை நன்கு பராமரிக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.