தமிழகத்தில் 2024-25 ஆர் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பதை இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 623 மாணவர்களும் , அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.