தமிழகத்தில் ஆசிரியர் ஓய்வூதிய பலன்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தனிப்பட்ட அரசு நிதி சார்ந்த தணிக்கை தடை நிலுவை இல்லை என்றால் உடனடியாக 30 நாட்களுக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். பணிக்காலத்திற்கு உட்படாத முந்தைய அல்லது பிந்தைய பள்ளி சார்ந்த தணிக்கை தடைகளுக்காக ஓய்வூதிய பலன்களை நிறுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.