தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மத்திய பொது விநியோகத் திட்ட அலுவலக தரப்பில், தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளதாகவும் அதேசமயம் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.