டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் ராகேஷ் – லலிதா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏழு மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் டெல்லியில் அதிகப்படியான குளிர் நிலவுவதால் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்க அறையில் தீ மூட்டி விட்டு குடும்பத்தினர் நான்கு பேரும் தூங்கி உள்ளனர்.

ஆனால் நெருப்பால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் மூச்சு திணறி நான்கு பேரும் சுயநினைவை இழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நால்வரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.