கனமழை, பெருவெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களுக்கு பதில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதிய சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வி, வருவாய்த் துறையுடன் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் இன்றி புதிய சான்றுகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சிறப்பு முகாம் நடத்தி புதிய சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.