தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுத்துறை பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தகுதி இல்லாத பலருக்கும் போலிச் சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது சான்றுகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில் போலிச் சான்று கொடுத்து அரசு பணியில் சேரும் நபர்களை கண்டறிந்து உடனே கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.