திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (52) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் விஜயலட்சுமியின் சகோதரர் கண்ணனுடன் சேர்ந்து ஒரு காரில் இன்று காலை சிவகாசியில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர்.

இந்த கார் யாகபுரம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் விஜயலட்சுமி, கண்ணன் இருவரும் உயிரிழந்த நிலையில் கோபி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த தகவலின் பேரில் துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.