சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் பருமனை குறைப்பதற்காக  புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் என்பவர்  அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் ஹேமச்சந்திரனுக்கு கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பம்மல் காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.