தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரப் பேச்சானது கருணாநிதியை நினைவுப்படுத்தியதாக திமுக தலைமை பெருமிதமாக கூறியுள்ளது. அதாவது, “கருணாநிதி எந்த ஊரில் பேசினாலும் அந்த ஊரில் திமுகவை வளர்த்த தலைவர்களைப் பற்றி பேசுவார்.

அதேபோல உதயநிதியும் சிறப்பாக பேசினார். அமைச்சர் உதயநிதியின் தனித்தன்மை வாய்ந்த இந்த பிரச்சார யுக்தியானது நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாக அமையும்” என கூறுகின்றனர்.